வாழ்க்கை தத்துவம் (பகுதி 01)

நோயின்றி வாழ வேண்டுமென்று நினையுங்கள் அடுத்தவரை நோகடித்து வாழ வேண்டுமென்று நினைக்காதீர்கள்


எதுவும் இல்லாத போது சமாளிக்கும் திறமையும் எல்லாம் உள்ள போது நீ நடந்து கொள்ளும் முறையும் தான் உன் வெற்றியை தீர்மானிக்கிறது


உங்க குழந்தைகளை நல்லா வளர்த்து இருக்கிறீங்க இந்த வார்த்தையை விட மிகப் பெரிய விருது ஒன்றை உங்களால் அம்மாவிற்கு வாங்கி கொடுக்க முடியாது


வாழ்வின் யதார்த்தம் இறக்கும் போது நமக்கு வேண்டாதவரையும் பார்க்கு விரும்புகிறோம் இருக்கும் போது நமக்கு வேண்டியவர்களையும் பார்க்க மறுக்கிறோம்


தேவைகள் மட்டும் இல்லையேல் மனிதர்கள் ஒருவருக்கொருவர் பேசவே யோசிப்பார்கள்



கடிக்கும் மிருகங்களோடு வாழ்ந்து விடலாம் நடிக்கும் மனிதர்களோடு வாழவே முடியாது