கொழும்பில் பல பகுதிகளில் திடீர் நீர் விநியோகத் தடை
இதன் காரணமாக Moratuwa, Rawathawatta, Soysa Pura, Ratmalana, Dehiwala, Mount Lavinia, Wellawatte, Pamankada, Mulleriyawa மற்றும் Kolonnawa உள்ளிட்ட பகுதிகளில் நீர் விநியோகம் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், Battaramulla பகுதிக்கு குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகம் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாளை (19) காலை 6 மணிக்கு முன்னர் நீர் விநியோகத்தை மீண்டும் வழமை நிலைக்கு கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
